வியாழன், 24 ஆகஸ்ட், 2017

குரு மொழி அறிவோம்

மரணம் என்பது நம் எதிரியல்ல. உடல் நலக்குறைவு,நோய்கள், அவஸ்தை என்பது ஒன்று, மரணம் என்பது முற்றிலும் வேறானது.மரணம்தான் வாழ்க்கையின் மிக சிறந்த அனுபவம்.
நாம் மரணத்தை கண்டு மிகவும் பயப்படுகிறோம்.நம் உடல்நலக்குறைவு,நோய்களை மருந்துமூலம் குணப்படுத்தலாம்.ஆனால் நாம் மனிதன் என்கிற நோயை குணப்படுத்த முடியாது. நம் வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலம் மரணத்திற்கான காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது என்பதை தவிர வேறு இல்லை.வாழ்க்கை நாட்களை அதிகரிப்பதன் மூலம் மரணத்தை மேலும் பரிதாபத்திற்குரியதாக்கிறோம்.
மரணம் என்பது அழகானது.மரணத்தை உடல் நலக்குறைவாக, ஒரு நோயாக, ஒரு மனித அவஸ்தையாக பார்க்க கூடாது.நாம் எச்சரிக்கையாக இருந்து, நாம் உடல் இல்லை என்பதை புரிந்து கொண்டால்,மரணம் ஓர் இயற்கையான பரிசு. அதுதான் சமாதி. நமக்கும் தியானம் நடக்கிறது.
" ஒருவர் தனக்குள்ளிருக்கும் ஒன்று எப்போதும் இறக்காது என்பதை அவர் தன் உள்ளிருந்து புரிந்து கொள்வது"------ஓஷோ பொன் மொழிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.