வெள்ளி, 29 ஏப்ரல், 2016

திருசெங்காட்டங்குடி சிறுத்தொண்டர் அமுது படையல் 6-5-2016 துர்முகி சித்திரை மாதம் 23-ம திகதி பரணி நட்சத்திரம்
இறைவன் ;உதிராபதிசுவரர் இறைவி ;திருக்குழல் நாயகி 


e.
சித்தஅடியார்களுக்குவணக்கம்நிகழும்துர்முகிவருடம்சித்திரைமாதபரணி
நட்சத்திரம்  திருசெங்காட்டங்குடி யில் சிறுதொண்டர் அமுது படையல் 6-5-2016 வெள்ளி கிழமை  இரவு  பிள்ளை கறி நிகழ்வும் உத்திராபதிஸ்வரர் வீதிஉலாவும் ஆயிரமாயிரம் சிவா அடியார்களின் சங்கமத்தில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல சிவனின் அருளையும்  அடியார்களின் ஆசியும் பெறவேண்டுகிறோம்
137. Tiruchenkattankudi
திருசெங்காட்டங்குடி 
Location: Ganapateeswaram near Mayiladuturai, Nannilam
(Chola Naadu-South of Kaveri)
Shiva: Uttarapathiyar, Ganapateeswarar
Ambal: Tirugukuzhal Nayaki.
Vriksham: Aathi
Theertham: Surya Theertham
Patikam : Sambandar, Appar
Travel Base: Thanjavur
Tvm7.jpg (55426 bytes)
Description: This Shivastalam is located near Tiruppugalur and the Vaishnava Divya Desam Tirukkannapuram and is also known as Ganapateeswaram. There are several features of interest and several colorful legends here. Shiva's dance here is referred to as Ubayapaadanarthanam. Sirutonda Nayanar is associated with this shrine. It is considered to be the 79th in the series of Tevara Stalams in the Chola kingdom located south of the river Kaveri.  Tiruchenkaattankudi is the site of one of the nine Nava - tandavams of Shiva Tiruvalangadu-Oordvatandavam, Kailasam-Veda Tandavam, Tiruvenkadu-Rahasyatandavam, Chidambaram-Ananda Tandavam, Madurai-Kaal Maari Aadiyadu, Kumbhakonam-Aadalvallar Tandavam, Vazhuvur-Dharukavana Tandavam, Atikai - Tripura Tandavam, and Tiruchenkaattankudi - Ubayapaadanartanam.
Legends: Ganapati is said to have prayed to Shiva here to seek atonement for the sin of having killed Gajamukhasuran, hence the name Ganapateeswaram. The demon's blood flowed to create the reddened land, Chenkaadu. Shiva Bhairava is said to have killed Raktabheejan & other demons here.
This temple occupies an area of about 2 acres. A five tiered rajaopuram adorns the entrance. The Vaataapi Ganapati temple (in commemoration of the expedition to Vaaataapi the Chalukyan capital) was raised by Sirutonda Nayanar and the then Pallava Emperor. Utharapateeswarar represents the Bhikshandakar manifestation of Shiva. There is an image of Vinayaka with a human face here in this temple.
Festivals: Six worship services are offered here each day. Navaratri, Sivaratri, Skanda Sashti and Kartikai Deepam are celebrated here; so is the Amudhu Padayal festival in the month of Chittirai. ; Vinayaka Chaturthi is also celebrated with great pomp here.
பெயர்: சிறுத்தொண்ட நாயனார்
குலம்: மாமாத்திரர்
பூசை நாள்: சித்திரை பரணி
அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி
முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி
சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால் சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்துவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.

நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.
மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’ என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.

சிவத் தொண்டராக

மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.
பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இறைவனின் திருவிளையாடல்

சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.
அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார், ‘உத்தராபதியாகிய பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, திருநீறு, உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது;’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட ஒண்ணாதனவும் எளிதில் உளவாகும்; அருமையில்லை’ என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கைதொழுதார். பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு; உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்;’ எனக் கூறினார். பின்னர். கேட்ட சிறுத்தொண்டரும் ‘யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்’ என்றார். ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று’ என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார்.
வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார். அதுகேட்ட கற்பிற்சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்.’ எனத் தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தி பின்னர் ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார். சிறுத்தொண்டர் மனமகிழ்ந்து தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.
பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார் ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளாவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார்.
சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர் அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பயிரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும் என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.
வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பயிரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.
சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

நுண்பொருள்

  1. குடிக்கொரு புதல்வனை மகிழ்ச்சியான மனத்துடன் குரூரமாகக் கொன்று உறுப்பரிந்து கறியமுது செய்யும் வல்வினை செயற்கரியதும் காரணம் காண்டற்கரியதுமான சிவத்தொண்டேயாகும். அது ஈசனடியார்க்காயின் எச்செயலும் அரியதில்லை எனக் காணும் உறைத்த மெய்த் தொண்டர்க்கு மிக இயல்பாக கைவரும் கருமமுமாகும்.
  2. கல்வி, வீரம், செல்வம், அரச அதிகாரம், சிவபக்தி என்பவற்றில் சிறந்திருக்கும் பெரியோர் சிவனடியாரிடத்தில் சிறிய தொண்டராய் பணிந்து நடப்பார்கள்.
  3. சிவதொண்டியற்றுவார்க்கு நேரும் சோதனைகள் அவர்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணெமே அமையும், போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்யவல்ல தொண்டர்க்கு அவ்வண்ணமே ஒரு சோதனை நேர்ந்தது. சோதனை அளிக்க வரும் பெருமானும் அதற்கேற்ற கோலம் பசு இறைச்சி வேண்டுதற் ஏற்ற ஒரு கோலமே.
  4. அரசரானவர் தொண்டுறுதிபடைத்தோரை அத்தொண்டுறுதி துலங்கும் வண்ணம், இயன்ற வசதிகள் அளித்து அரச கருமத்தின்றும் ஓய்ந்திருக்கச் செய்தல் சிறந்தது.
  5. அருள் தருதற்குப் பெருமாள் கொள்ளும் கோலம் அன்பர் நிலைக்குப் பொருந்தியதாக அமையும். சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கை, சீராளர் என்போர்க்கு அருள்புரிய கொண்டகோலம் சோமாஸ்கந்த மூர்த்தமாயிருந்தல் காண்க. சந்தனத்தாதியாருக்கும் திருவடிப்பேறு அருளியமையும் சிறப்பே.
  6. சோதனைகள் எல்லாம் வரப்பிரசாதமாக நிறைவுறும்
சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி
“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை. நன்றி விக்கி பீடியா
ஸ்ரீ கொங்க சித்தருக்கான ஜோதி விழா ஸ்ரீ பிருகு அருள் நிலையதில் சித்திரை மாதம் உத்திராட நட் சத்திரம்  அன்று இனிதே நடந்ததேறியதுஅதில் சிலகாட்சிகள்
சுகந்த நீருக்கான மருந்து இ டிக்கபடுகிறது




ஸ்ரீகொங்கண சித்தரைவரவேற்க ஆயத்தமான அகண்டம்


 பிருகு முனிவருக்கான அலங்காரம்

சுகந்த நீர் வெள்ளி பாத்திரத்தினால் அடியார்களுக்கு வழங்க பட்டது

புதன், 27 ஏப்ரல், 2016

ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள் !!!

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
*மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் – சிதம்பரம்.
*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ் வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.
*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் – கரூர்.
* சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்
* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடை யார் கோவில்.
*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
* அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
* புனர்பூசம் 1, 2, 3 (மிதுனம்) =ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீ ஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும் பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவன ந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
*மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர், அழகர் கோவில், மதுரை அருகில்.
* உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) =ஸ்ரீஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்; ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் – தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீ கரூவூரார் – கரூர்.
* சித்திரை 1,2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாய தாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம் frown emoticon ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
*மூலம் (தனுசு)=ஸ்ரீபதஞ்சலிராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
*பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார் கோவில்.
*உத்திராடம்1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
* அவிட்டம் 1 , 2 (மகரம்); அவிட்டம் 3, 4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம் திட்டா.
* பூரட்டாதி4 (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரம ஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங் குன்ற ம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமா

Maruderi's Sangalpam for all in Guru Pooja (Vinnapam in English)


Let Shiva’s boundless divinity flourish this world and all beings in it
The Progenitor Vishnu's energy preserve this world day to day
Let Brahma's creativity produce greater and righteous resources
Velan's supremacy by haragara haragara naama eliminate the erroneous ………….1

Let Panchabootha and Planets do good to all beings.
The blessings of Saptharishi’s flourish and nourish this world
Let Guru's Soma light shape greater minds for humans
Let Aditya's light strengthen our atma and guide us……………………………………..2

With your blessings the act of kindness in this world should increase
Let the siddha's truth and values spread to everyone in this world
Let humans live in harmony per Dharma’s principles
Thus reach higher state of living by cultivating greater and good thoughts…………….3
Let the pathinenmar's divinity spread to everyone on earth
Eradicating diseases, illness and sufferings of minds
Let writings of Brahma's change here when we deeply revere thereby
Even Chronic problems cure here with the blessings of Siddhas………………………..4

Wealth and knowledge increase in this world like perennial stream of water

The divine Ganges, Yamuna Sindhu, Godaveri Cauvery bless all with fullness
Bless us oh mighty kalpa Vriksha that generates the eternal nectar
Let the Gnanis bless every living being in the world from the Aganda Sothi…………..5
    

Let Nandi devar remove all obstacles and guard all human beings
Let kamadhenu valued blessings and energy get generous to all
Let Maruderi's diving spring heal every being and people visiting here
Let all humans get their required Annam and get purified internally …………….……6

Our beloved Gurunaadha blessed shall we be all today by Holy Vaalai Mother
Oh Guru & father by collective bliss of all divinities, let all beings get blessed
Oh Guru of Vedas let this world get blessed, by all Masters and Gurus
Oh Guru of Kaliyuga let all beings be warmly blessed by your divine grace…………..7 

Oh Guru let humans foster and grow awareness of higher knowledge
That blossoms clarity and thoughts thereby forming sound mind in all
Guru as divine light guide us out of darkness and tightness 
Help us cross this life with a mind that adores the path of truth………………………….8

Oh father we look upon you who provides knowledge, love and mindfulness
Oh father we revere you as the one who lights the awareness to seek
Oh father we look at you the Siddha of Maruderi who alleviates our minds            
And see you as the Guru who is revered as the great yogi of all worlds…………………நன்றி  பிருகு அருள் நிலையம்  மருதேரி 

பிருகுமகரிஷி அருளிய மகாலட்சுமியை...(Bhrigu and Mahalaxmi)


Bhrigu and Mahalaxmi

Bhrigu's south visit becomes more important, after his creation of the most well known sanctum Thirumala. A gayatri of Bhrigu gifted to us by the Gracious Sugabramar (Suka rishi) provides more clarity on this.

Om Sarva Deva Priyaya Vidmahe
Srinivasa Sambhava Kaaranaya Deemahi
Dhanno Brihumunisa Prachodayat.........................(Suka Maharishi)

The mantra help us understand that Bhrigu who is a favorite to all lords was the reason for the Srinivasa Sambhava (incident) and hence the creation of Tirumala @ Thirupathi. As a creator(Prajapati) designated by the Trinity, Bhrigu's supreme penance was instrumental in getting Mahalakshmi to Kaliyuga, Shukra (Venus) and Rishi Vargams like (Parasu Ram, Jamadagni, Chavanya and many more). The descendants of Bhrigu Maharishi are known as Bhargavs. For instance Parsuram was called as BhargavRam as against the DasarathaRaman of Ramayana period.

The mantras will carry "Bhargav" as a part of them or names as we see for Mantra of Shukra below .

Hima kunda mrinalaabham daityanam paramam gurumSarv shastra pravaktaram
Bhargavem pranamamyaham



பிருகு மகரிஷியின் தெற்கு பயணத்தின் முக்கிய அங்கமாக திகழ்வது  சப்தகிரியில் என்னும் திருமலையில் உள்ள எழுமலையான் தலம் . சுகப்ரம்மர் அருளும் பிருகுமுனி காயத்ரி இதற்கு ஒரு சான்று

ஓம் சர்வதேவ ப்ரியாயா வித்மஹே 
ஸ்ரீனிவாச சம்பவ காரணாய தீமஹி 
தன்னோ பிருகு முனிச ப்ரசோதயாத் 

மும்மூர்த்திகளின் ஆசி பெற்று இந்த பிரபஞ்சத்தில் படைப்பு மற்றும் பல துறைகளில் பிருகுவின் துணை உள்ளது . அவரது வம்சத்தில் பிறந்தவர்கள் பார்கவ் என்று பெயர் சார்ந்து வரும். அதனால் மகாலட்சுமி பார்கவி என்றும் பரசுராமர் பார்கவராமன் என்று புலனாகிறது. சுக்கரனும் அவரது மகன் தான் என்று புராணங்கள் கூறுகிறது. சுக்கிரனது மந்திரத்தில் வரும் பார்கவெம் என்ற வார்த்தை அதனை உறுதி படுத்துகிறது.


MAHALAXMI OF KOLHAPUR





மகாலட்சுமி தாயார் பிருகு மகரிஷி மகளாக செண்பகரண்யம் என்னும் மன்னார்குடியில் பிறந்து பின் ஆயிரம் ஆண்டுகளாக கரவிபுரம் என்னும் கொள்ஹபுரில் கடும் தவம் புரிந்து ஸ்ரீனிவாசனை திருமலையில் கரம்பற்றி கலியில் தன் ஆசியை தருகின்றார். கனகதாரா ஸ்தோத்திரத்தில் மகாலக்ஷ்மியை "பிரிகுவின் மகளே" என்று வணங்கி தங்க நெல்லி வரச் செய்தவர்  அத்துவிததின் குருவான ஆதி சங்கரர். இந்த கலியில் தனமும், சகல செல்வமும், செழிப்பும், வளமும் பெற மகாலட்சுமி, சுக்கிரன் ஆகியவர்களின் ஆற்றலை வெளி கொண்டு வந்து அருளியவர்  மகா தவசியாக இருக்கும் நித்ய ஸ்வரூபி பிருகு மகரிஷி.

மேலும் பிருகு மகரிஷி பார்கவா வம்சத்தை சேர்ந்தவர்களை தெரிந்துகொள்ள  ..

The Vishnu Purana says Goddess Mahalakshmi was born to sage Bhrigu and hence known by the name Bhargavi. It is said that Mahalakshmi grew as the daughter and sanctums of Alamelu mangapuram and Rajagopalar sannidhi are associated to this. In Kaliyuga when there is pain and misery due to lack of money and prosperity, Bhrigu was instrumental in setting up the positive energy with help of Mahalakshmi and Vishnu.

When Adhi Shankara requests the universe and Mahalaxmi to give golden gooseberries to a poor lady. Following were the words used in his Kanakadara Stotram.

Namosthu devyai Bhrugu nandanayai,
Namosthu vishnorurasi sthithayai,

Salutations to her who is daughter of Bhrigu,
Salutations to her lives on the holy chest of Vishnu,


Mahalakshmi had grown up in a place called Senbaga-aranyam (Mannargudi) as daughter of guru Bhrigu Maharishi. It is believed that Goddess Mahalakshmi had been in Meditation for more than 1000 years in a place called Kolhapur (Karavirapura) of Maharashtra. Post which she was married Lord Srinivasa in Tirumala. The place hence is blessed with wealth and prosperity.

I'm also presenting the tamil slogam that Bhrigu Gifted to us on Mahalakshmi. கீழ் வரும் தமிழ் சுலோகம்  மகாலட்சுமியை வணங்க பிருகு மகரிஷி அருளிய எளிய முறை.

ஓம் ஸ்ரீம் சகல செல்வங்களையும் 
தன் அருளால் ஈயும் குணம் 
பெற்றவளே தாயே திருமகளே 
விஷ்ணுவின் திருமார்பில் உறைபவளே 
பத்ம மலரை தாங்கி அருளாட்சி புரிபவளே 
மகாலக்ஷ்மியே உன்னை துதிக்கிறேன் 
என்னை வழி நடத்துவாய் 




Wealthy and prosperity is showered to Right Humans with the blessing of Great Guru Bhrigu. Now you know who is the Rishi you have to look upon if financial stability and prosperity needs attention,

சகல செல்வங்களும், செழிப்பும், அட்ட லட்சமி கடாச்சமும் தரவல்ல ரிஷி யார் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். 18 siddar meditation and tecniques



பிருகு முனி - ஒரு தொகுப்பு -1

பிருகு முனி      

அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர்  உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். சதுர் புஜன்கலான மனம், சித்தி, புத்தி,  அகங்காரம் ஆளுகின்ற திருமாலை  பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைத்தவர். ஆருடம் என்னும் சோதிட சாத்திரத்தின் குருவாக விளங்குபவர்.  தமிழில் பிருகு நாடி என்றும் பிருகு நந்தி நாடி என்றும் அறியலாம். 
அதை போல  வட மொழியில்  "பிரிகு சமிதை" மிக மிக பிரபலமானது.  அதனை ..

From tamil wiki: "மகரிஷி பிருகு, ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய இன்நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலக்கட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரஹங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது"

வடநாட்டிலிருந்து (பருச்கச்) குஜராத்  முதல் திருநெல்வேலி நாங்குநேரி வரை இவர் தவம் ஏற்றியே இடங்கள் இந்திய முழுவதும் உள்ளன. இவரது துணையாள் பெயர் புலோமா. புராணங்கள் கயத்தி என்று இன்னும் ஒரு பெயரையும் முன் வைக்கிறது.

சித்தர்கள், இருடிகள், ரிஷிகளுக்கு தேசாந்தர  நியமங்கள் கிடையாது. ஆகையால் வேறு எங்கெல்லாம் அவர் தவ ஞான சீவ தளங்கள் உள்ளது
என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


 பிருகு என்னும் ஞானி



வேதங்கள் பிறந்த எல்லாம் ஒரே பொருளான இறைவனை பற்றி விவரிக்க தான். பின் இறை அனுபவம்  தனக்குள் அடைந்தவர்கள், தெள்ள தெளிந்து உரைப்பது  உபநிஷத் ஆகும். அது போல தைத்ரிய உபநிஷத், யசுர் வேதத்தை சார்ந்து வருவது. அதில் பிருகு முனியின் ஞான அனுபவத்தை "பிருகு வள்ளி" பதிவு செய்துள்ளது. அதன் கருத்தை கிழே காணலாம். 

பிருகு முனி பிரம்ம ஞானம் பெறுவதற்காக வருணனை நோக்கி வேண்டுகிறார்.  கேள்வி மற்றும்  விடை  என்ற சம்பாசனையில் அமைய பெற்றுள்ளது இந்த உபநிஷத். இதில் 5 அனுவாகம்  (பகுதி), பிருகு முனி  பிரமத்தை அடைய அவர் எடுத்த முயற்சியையையும், அடைந்த ஞானத்தையும் காட்டுகிறது

Stance 1 of Bhriguvalli


Bhrigu, the son of Varuna, approached his father Varuna, saying, "Sir, please teach me Brahman". To him, Varuna said thus: "Food (annam), Life (pranan), Sight (sakshu), Hearing (srodhram), Mind (manas), Speech (vaak)". To him, he said: " that everything in the universe originates from Brahman, exists in Brahman and unfolds through Brahman and merges in Brahman alone." . BhriguRishiperformed tapason this upadesa. Bhrigu Valli is to know the process of sadhana for brahma vidhya. Brahma vidhya sadhanam is thavam. Concluding Food (Annam) as Brahman


முதல் அத்தியாயம்- பிருகு வள்ளி 
பிருகு தன் தந்தையான வருணனை அணுகி "எனக்கு பிரமத்தை போதியுங்கள்" என வேண்டுகிறார்.  அதற்கு வருணன் அன்னம் (உணவிலிருந்து ஆவி ரூபமாக உள்ள  சுக்கிலம்), காணுதல்,  கேட்டல், மனம்,  வாக்கு" ஆகியவைகளை கூறுகிறார். பின்னர்  "எங்கிருந்த எல்ல சீவன்கள் வந்தது, எங்கே வசிக்கிறது, எங்கே  மறுபடியும் சென்றடைகிறது " அறிந்தால் அதுவே பிரமம் என்று குறிப்பிடுகிறார்.
தவத்தில் ஆழ்ந்து பின் அன்னமே பிரம்மம்  என்று முடிவு செய்கிறார் பிருகு முனி

Stance 2 of Bhriguvalli


Now that all jeevas get created from annam. They live on annam. In the end they become annam. But since annam itself has a beginning and end, he doubted whether this can be Brahmam. Hence he approached his father again and asked him to teach him about Brahmam. Lord Varunaadvises him to enquire into Tapas again and says Tapas in Brammam. Bhrigu muni now meditates and comes to a conclusion that Pranan (Prana) is bramhan. However Varuna asks him to meditate again

 இரண்டாம் அத்தியாயம்- பிருகு வள்ளி


அன்னம் தான் பிரம்மம் என்றாலும், எல்லா சீவன்களும் அதை சார்ந்து இருந்தாலும் அதற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளதே. ஆகையால் அது பிரம்மாக இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்து மறுபடியும் தந்தையிடம் பிரம்மத்தை பற்றி உபதேசம் கேட்கிறார். அதற்கு வருணனோ தவம் இயற்றி பிரம்மத்தை அறிந்து கொள்ள சொல்கிறார். தவத்திற்கு பிறகு பிராணன் தான் பிரம்மம் என்ற முடிவுக்கு வருகிறார். அனால் வருணன் மறுபடியம் தவம் ஏற்ற சொல்கிறார்.  

Stance 3 of Bhriguvalli

Bhrigu now concludes that manas is the reason we know pranan after his meditation. Without mind how can one understand or know the prana. Thinking manas is the Brahman he approached his father to clarify if manas is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again 

மூன்றாம் அத்தியாயம்- பிருகு வள்ளி

பிருகுமுனி இப்போது மனம் தான் பிரானை உணர காரணமாக உள்ளது என்று முடிவி செய்கிறார். மனம் என்று ஒன்று இல்லாவிட்டால் பிராணனை எப்படி உணர முடியும். ஆகையால் மனமே பிரம்மம்  என்று  நினைத்து தந்தையிடம் சென்று கேட்கிறார். அதற்கு அவர் நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 4 of Bhriguvalli

Bhrigu now concludes that intellegence is important to manas.. Without intelligence how can one understand the manas. Thinking manas is the Brahman he approached his father to clarify if intelligence is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again deeply.

நான்காம்  அத்தியாயம்- பிருகு வள்ளி


பிருகு இப்போது புத்தி தான் மனதை விட முக்கியமானது என்று முடிவு செய்கிறார் . புத்தி இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்கிறார். இதை தந்தை முன் வைக்கிறார். அதற்கு அவர்
நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 5 of Bhriguvalli


Bhrigu in deep trance goes to the state of Ananda and understands that Anandha is beyond intellegence(Vignana). All the next songs talk as aham annam. There is a song that comes out of ecstacy by aham annam when he is in the state of Anandha and see the golden jyothi. This is the jagarat state of Jeeva (Agnaya)


ஐந்தாம் அத்தியாயம்- பிருகு வள்ளி


பிருகு முனி இப்போது ஆழ்ந்த த்யானத்தில் பேரானந்த நிலையை அடைந்து
சுகிக்கிறார் . அகம் அன்னம் என்று பாடல்கள் தொடர்கின்றது. அதில் பேரானந்த
நிலையை "ஹா வூ, ஹா வூ " என்று யோகின் இன்பம்  தெரிகிறது.  பின் அந்த ஆனந்த ஜ்யோதியை கண்டேன் என்பதையும்
தெளிவாக கூறுகிறார். அந்த பேரானந்த உபநிஷத் பாடல் கீழ் வருமாறு..


AHAM ANNAM அஹம் அன்னம்

 Etam annamayamaatmaa anupasamkramya
Etam manomayamaatmaa anupasamkramya
Etam vijnaanamayamaatmaa anupasamkramya
Etam aanandamayamaatmaa anupasamkramya
Imamllokaan kamaanni kaamaroopyanusamcharan
Etat saamam gaayanaaste
Haa...vu   haa....vu   haa....vu
Aham annam aham annam aham annam
Aham annado aham annado aham annadah
Aham slokakrut aham slokakrut aham slokakrut
Aham asmi prathamajaa shrutasya poorvam devebhyo amrutasya naabhyai
Yo maa dadaati sa ideva maavah
Aham annam annam adantama admi
Aham vishvam bhuvanam abhyabhavaam Suvarna jyotih

meaning: English
Hāa vu! Hāa vu! Hāa vu! [ecstasy...] I am the food, I am the food, I am the food! I am the eater of the food, I am the eater of the food, I am the eater of the food! I am the maker of verses [poet], I am the maker of verses, I am the maker of verses! I am the first born of this world, the manifestation of truth as the formed and the formless! I existed before the gods! I am the centre of immortality! He who offers food, it is this me he protects! I am food, I am food and I am the one who eats up the eater of food! It is I that has become the entire universe! I am the golden light

 ஹா...வூ , ஹா..வூ (பேரின்பத்தின் வெளிபாடாக இந்த சத்தம்  ..அகமே அன்னம், அகமே அன்னம், அகமே அன்னம். நானே அன்னத்தை உண்பவன்,நானே அன்னத்தை உண்பவன், வாக்கு உரைப்பவன் அகமே,  வாக்கு உரைப்பவன் அகமே, முழு முதலும் அகமே, உருவமும், அருவமும் ஆகி நின்ற மெய்யே, பழம் பொருளே, இரவா வரம் கரு பொருளே. அன்னம் அளிப்பவனே, என்னை காக்கும் காவலனே. அகமே அன்னம், அகமே அன்னம். நானே உண்ணுகின்றேன் அந்த உண்ணும் அகத்தை உண்பவன். அதனாலே  நான் பிரபஞ்சமானேன். அந்த அருட் பெரும்  சொர்ண சோதி நானானேன்.



இதனை அழகாக மாணிக்கவாசகர் அனுபவத்தோடு ஒப்பிடலாம்

மாசற்ற சோதியே மலர்ந்த மலர்ச்சுடரே
  தேசனே தேனார் அமுதே சிவபுரனே


அடியார்க்கு அன்னம் பாலித்தல், அன்னம் பாலை பிரித்து எடுத்தல்
என்ற வாக்கியங்கள் ஞானம் சார்ந்து இருப்பதை உணரலாம் நன்றி ;18 siddar and meditation techniques

திங்கள், 25 ஏப்ரல், 2016


ஸ்ரீ கொங்கண  சித்தர் பூசை விழா ஜீவ வாக்கு 
மருதேரி   ஸ்ரீ பிருகு அருள் நிலையம் 
சித்திரைமாதம்   உத்திராடம் நட்சத்திரம்  29-4-2015
 1) ஓங்கார ஒளியுருவே வணங்கி உன்னை
    ஒதிடுவேன் பிருகுயான் சீவ வாக்கு
    பாங்குடன் ************  அறியமேலாய்
    பற்றி வரும் சன்மார்க்க குடிலம் தொட்டு

2)தொட்டுவரும் கயல் திங்கள் இருபானை பாகை
   தக்கவே பூசைவிழா விளக்கம் கூற
   சூட்சமமாய் கதிருட்சம் காலம் தன்னில்
   சித்தர்களை வரவேற்கும் பொருட்டுமே தான்
    In this day of Kayal month on 25th
    The apt Pooja for the day is
    Sotchma during the Sun’s peak period
    To welcome the great Siddhas


3)தானுயர்வாய் நின்றதொரு சீவ சித்தன்
   தரணியிலே அயகலைகள் கற்றோன் தான்
   மேன்மைப்பட போகனுடைய பூரண சீடன்
   மனமழகாய் கொங்கணரின் சோதி கொள்வீர்

    Is the one who stood high as Seeva Siddha
    Is the one who specializes in Iron (Metal)
    Is a best and Complete Disciple of Great Bhogar Siddhar
    With pleasant mind have Konganar on Jyothi


4) சோதியது சித்திரையாம் திங்கள் தன்னில்
    சிறப்புடைய உத்திராடம் பளிங்கன் வாரம்
    ஆதியந்தம் இல்லாத அருணை தலத்தான்
    அற்புதமாய் கௌதமனின் ஆசி கொண்டான்
  
    Jothi on the month of Chitirai
    On the star of Uthiradam on Friday (April 29th- 2016)
    From the place of Arunachalam who has no start and end
    Was Gowthamar (Gowthama Rishi) who blessed and guided him


5) கொண்டதொரு தவனிஷ்டை சித்தி கொண்டான்
    குருபக்தி மேலோங்கிய சித்து தானே
    பின்னமில்லா அரிவிட்னு மலையானும் தானும்
    பூரணமாய் கிரிகாப்பு கொண்டோன் தானே
  

    Based on that guidance Konganar took dhyana Nistai and Siddhi
    Who had higher level of guru bhakthi
    The flawless Hari Vishnu’s and Thirumal
    is the 7 Giri (Tirumala) that has complete protection by him


6) தானென்ற அகந்தையது மயக்கம் தொட்டு
    தர்கித்து நின்றோர்க்கு அகந்தை நீக்கி
    ஊனமில்லா அருள்ஞானம் அளிக்க வல்ல
    உயர்கதியாம் வருவோர்க்கு அருள் பொருளும்
     The one’s who are deep in arrogance and ego
    And debated where relieved from their arrogance
    The one who is capable of blessing without fault
    Blesses people with Wealth and Holiness
  

7) பொருளான விக்கினத்தை விலக்கி வைத்து
     பூஷணங்கள் தான் அளித்து அலங்காரமாய்
     விருத்தியதை தானளிக்க வல்லதாய் இருக்க
     வகையான சுகந்தநீர் துளசி கூட்டி
                                                                                 

     He is the remover of obstacles for Money/Materialistic life
     With ornaments and beautiful decorations
     Proliferates due to his higher blessings
     With Sugandha Water added with Thulasi (Plant)
  

8) கூட்டியே ரசிதமதில் நீர்பாத்திரம் கொண்டு
     சுகமான நீர்பாத்திரம் வைத்து ஆசி
    மாட்சிமையாய் தனம்பொருளும் விருத்தி காண
    மங்களமாய் தாமரை திரி கொண்டு ஏற்றி

    In a silver metal glass serve it
    A silver metal water glass after taking his blessings
    With Majesty to multiply Money and Goods
    Use the wick of Lotus for his Jyothi

9) ஏற்றியுமே நெய்யதுவால் வேங்கடேசன் நாமம்கூறி
    இயம்பினோம் முத்தேவர் ஆசி யுடன்
    குற்றமற அன்னஔஷத தர்மம் நிலைக்க
    குறைவாரா சதபேர்க்கு குன்றா அன்னம்
  

    In ghee with the nama of Lord Venkatesa
    With the blessings of Trimurthi
   The dharma of Annam and Medicine @Maruderi
    Ensure Annam for Sadham people
  

10) அன்னமது சித்திரஅன்னம் வகையிலே
      அருள்நிலையில் இணைந்துமே ஆசி ஈய
      உன்னதமாய் வாலையுடன் பராபரை ஆசி
      ஒருசேர வாய்க்கும்அப்போ சீவம் முற்றே
  

      Annam in the type of chitranam
      With Arul and Blessing on the day
      Is by the Unnadha Valai and Paraparai
      Will together bless-all; seevam ends

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.