ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

Pulasthiar Guru Pooja / After 2:00pm 25th-Aug on 2016


RajaYogi-Pulathiar
சிவராஜ யோகி புலத்தியர்



சிவராஜ யோகி புலஸ்தியர் பற்றி நந்தி தேவர் குறிப்பு :






நோக்கிப்பின் இருபான் நாழிகை மேல் 
நிலை நிறுத்த நல்லதொரு அகண்ட சோதி 
மிக்கவே அன்று முழுதும் கார்மேகன் 
மேலான வெண்ணையுண்டோன் ஞான மைந்தன் 

After 2:00pm 25th-Aug on 2016 
is the time for Aganda Jyothi Dharsan
Is a day of ; The one who is made of Dark Clouds
Is the one who eats Butter (Mentions the day as Gokula-Ashtmi)

மைந்தனோடு மனத்தெளிவை அளிப்பார் அப்பா 
முக்கியமாய் தவராஜ யோகியான 
வந்திடவே புலஸ்தியரும் குடிலம் ஏக 
வரவேற்று அவர் ஞானம் அடைவீர் மக்காள் 

With son will provide clarity to Mind
Important is the Divine Raja Yogi
Pulasthiar who visits Maruderi's Ashram
Greet him and attain his knowledge : my SONS

அடைவீரே அவர்மூலம் கூறிட தான் 
அகத்தியரின் ப்ரியமான ஞான சீடா 
கமலமுனி பவுத்திரனே நித்திய சீவனான 
புலஸ்தியனே மாமுனியே உன்பாதம் போற்றுகிறோம் 

To attain call his Moola mantra that states Oh Guru
"The Favorite disciple of Agasthya and
 Grandson of Kamalamuni, Oh Immortal -
 -Pulasthya, - Mamuni our obeisance to your feet"


போற்றியே தொழுதிட ஞான சித்தன் 
ஏற்றதொரு பாபநாசனம் தனிலொரு   முக்தி 
இருமுறையாய் ஆவுடையார் கோட்டம் ஒன்று 
என்றவிதமும் அவுஷதம் அன்று வில்வாதி 

With obeisance to the Gnana Siddha
One of his Mukthi was at Papanasam
the second was at Aavudaiyar Kovil   (Siddhas get to samadhis and mukthis more than once)
the medicine will use combinations of Vilvam for the day


Also Butter with  Thulasi will be provided as Aganda Prasadham on this day. All are welcome to be blessed by the "RAJAYOGIS" 







Following is about Pulasthiar from Bogar



உருவான புலஸ்தியரின் மார் க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.