வியாழன், 18 ஆகஸ்ட், 2016


                                             ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி

                        

நிகழும் துர்முகி வருடம் ஆவணி மாதம் 9 ம் திகதி வியாழன் கிழமை(25-8-2016) கிருஷ்ணன் ஜெயந்தி அன்று காலை6-00 மணிக்கு ஸ்தல பூர்வாங்க அட்டமி நாயகன் கால பைரவ மூர்த்திக்கு சுப ஆவாகன பூஜையும் தொடர்ச்சியாக முருகனுக்கு நூற்றெட்டு நாம ஜபமும் மதியம் மேல் 2-30மணிக்கு ஸ்ரீ பிருகு மகரிஷிக்கான ரோஹினி நட்சத்திரம் ஜோதி பூசையும் அன்று ஸ்ரீ தவராஜயோஹி அகத்தியரின் பிரதானமான சீடர் புலஸ்தியர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் உள்ளதாய் நந்தி தேவர் வாக்கு அருளியதை முன்னிட்டு   ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் –இவ்விழா சித்தர்களின் அருள் வேண்டி அகத்தியர் அருளிய வில்வாதி சூரணமும் அகண்ட பிரசாதமாய் வெண்ணையும் துளசியும் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெறும் அன்று அன்பர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சித்தர்களின் அருளாசியதனை பெற வேண்டுகிறோம் ---இன்பமே சூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -

                   கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி

                          குருவின்ஆசியால்வரவேற்கும் 

               ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்

Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargas on singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136






அய்யன் சப்தரிஷிகளில் ஒருவர். இந்த 7 வர்  உலகத்தின் அவயன்களாய் படைப்பிலும், காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். சதுர் புஜன்கலான மனம், சித்தி, புத்தி,  அகங்காரம் ஆளுகின்ற திருமாலை  பிரதானப் படுத்தி ஞான தத்துவங்கள் அமைத்தவர். ஆருடம் என்னும் சோதிட சாத்திரத்தின் குருவாக விளங்குபவர்.  தமிழில் பிருகு நாடி என்றும் பிருகு நந்தி நாடி என்றும் அறியலாம். 
அதை போல  வட மொழியில்  "பிரிகு சமிதை" மிக மிக பிரபலமானது.  அதனை ..

From tamil wiki: "மகரிஷி பிருகு, ஏறக்குறையா கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய இன்நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலக்கட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரஹங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது"

வடநாட்டிலிருந்து (பருச்கச்) குஜராத்  முதல் திருநெல்வேலி நாங்குநேரி வரை இவர் தவம் ஏற்றியே இடங்கள் இந்திய முழுவதும் உள்ளன. இவரது துணையாள் பெயர் புலோமா. புராணங்கள் கயத்தி என்று இன்னும் ஒரு பெயரையும் முன் வைக்கிறது.

சித்தர்கள், இருடிகள், ரிஷிகளுக்கு தேசாந்தர  நியமங்கள் கிடையாது. ஆகையால் வேறு எங்கெல்லாம் அவர் தவ ஞான சீவ தளங்கள் உள்ளது
என்பது அவர்களுக்கே வெளிச்சம்.


 பிருகு என்னும் ஞானி



வேதங்கள் பிறந்த எல்லாம் ஒரே பொருளான இறைவனை பற்றி விவரிக்க தான். பின் இறை அனுபவம்  தனக்குள் அடைந்தவர்கள், தெள்ள தெளிந்து உரைப்பது  உபநிஷத் ஆகும். அது போல தைத்ரிய உபநிஷத், யசுர் வேதத்தை சார்ந்து வருவது. அதில் பிருகு முனியின் ஞான அனுபவத்தை "பிருகு வள்ளி" பதிவு செய்துள்ளது. அதன் கருத்தை கிழே காணலாம். 

பிருகு முனி பிரம்ம ஞானம் பெறுவதற்காக வருணனை நோக்கி வேண்டுகிறார்.  கேள்வி மற்றும்  விடை  என்ற சம்பாசனையில் அமைய பெற்றுள்ளது இந்த உபநிஷத். இதில் 5 அனுவாகம்  (பகுதி), பிருகு முனி  பிரமத்தை அடைய அவர் எடுத்த முயற்சியையையும், அடைந்த ஞானத்தையும் காட்டுகிறது

Stance 1 of Bhriguvalli


Bhrigu, the son of Varuna, approached his father Varuna, saying, "Sir, please teach me Brahman". To him, Varuna said thus: "Food (annam), Life (pranan), Sight (sakshu), Hearing (srodhram), Mind (manas), Speech (vaak)". To him, he said: " that everything in the universe originates from Brahman, exists in Brahman and unfolds through Brahman and merges in Brahman alone." . BhriguRishiperformed tapason this upadesa. Bhrigu Valli is to know the process of sadhana for brahma vidhya. Brahma vidhya sadhanam is thavam. Concluding Food (Annam) as Brahman


முதல் அத்தியாயம்- பிருகு வள்ளி 
பிருகு தன் தந்தையான வருணனை அணுகி "எனக்கு பிரமத்தை போதியுங்கள்" என வேண்டுகிறார்.  அதற்கு வருணன் அன்னம் (உணவிலிருந்து ஆவி ரூபமாக உள்ள  சுக்கிலம்), காணுதல்,  கேட்டல், மனம்,  வாக்கு" ஆகியவைகளை கூறுகிறார். பின்னர்  "எங்கிருந்த எல்ல சீவன்கள் வந்தது, எங்கே வசிக்கிறது, எங்கே  மறுபடியும் சென்றடைகிறது " அறிந்தால் அதுவே பிரமம் என்று குறிப்பிடுகிறார்.
தவத்தில் ஆழ்ந்து பின் அன்னமே பிரம்மம்  என்று முடிவு செய்கிறார் பிருகு முனி

Stance 2 of Bhriguvalli


Now that all jeevas get created from annam. They live on annam. In the end they become annam. But since annam itself has a beginning and end, he doubted whether this can be Brahmam. Hence he approached his father again and asked him to teach him about Brahmam. Lord Varunaadvises him to enquire into Tapas again and says Tapas in Brammam. Bhrigu muni now meditates and comes to a conclusion that Pranan (Prana) is bramhan. However Varuna asks him to meditate again

 இரண்டாம் அத்தியாயம்- பிருகு வள்ளி


அன்னம் தான் பிரம்மம் என்றாலும், எல்லா சீவன்களும் அதை சார்ந்து இருந்தாலும் அதற்கும் ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளதே. ஆகையால் அது பிரம்மாக இருக்க வாய்ப்பில்லை என்று உணர்ந்து மறுபடியும் தந்தையிடம் பிரம்மத்தை பற்றி உபதேசம் கேட்கிறார். அதற்கு வருணனோ தவம் இயற்றி பிரம்மத்தை அறிந்து கொள்ள சொல்கிறார். தவத்திற்கு பிறகு பிராணன் தான் பிரம்மம் என்ற முடிவுக்கு வருகிறார். அனால் வருணன் மறுபடியம் தவம் ஏற்ற சொல்கிறார்.  

Stance 3 of Bhriguvalli

Bhrigu now concludes that manas is the reason we know pranan after his meditation. Without mind how can one understand or know the prana. Thinking manas is the Brahman he approached his father to clarify if manas is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again 

மூன்றாம் அத்தியாயம்- பிருகு வள்ளி

பிருகுமுனி இப்போது மனம் தான் பிரானை உணர காரணமாக உள்ளது என்று முடிவி செய்கிறார். மனம் என்று ஒன்று இல்லாவிட்டால் பிராணனை எப்படி உணர முடியும். ஆகையால் மனமே பிரம்மம்  என்று  நினைத்து தந்தையிடம் சென்று கேட்கிறார். அதற்கு அவர் நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 4 of Bhriguvalli

Bhrigu now concludes that intellegence is important to manas.. Without intelligence how can one understand the manas. Thinking manas is the Brahman he approached his father to clarify if intelligence is Brahmam. Lord Varuna advises him to enquire into Tapas again. Bhrigu muni now meditates again deeply.

நான்காம்  அத்தியாயம்- பிருகு வள்ளி


பிருகு இப்போது புத்தி தான் மனதை விட முக்கியமானது என்று முடிவு செய்கிறார் . புத்தி இல்லாமல் எதையும் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்கிறார். இதை தந்தை முன் வைக்கிறார். அதற்கு அவர்
நீ மறுபடியும் சென்று தியானம் செய் என்கிறார்.

Stance 5 of Bhriguvalli


Bhrigu in deep trance goes to the state of Ananda and understands that Anandha is beyond intellegence(Vignana). All the next songs talk as aham annam. There is a song that comes out of ecstacy by aham annam when he is in the state of Anandha and see the golden jyothi. This is the jagarat state of Jeeva (Agnaya)


ஐந்தாம் அத்தியாயம்- பிருகு வள்ளி


பிருகு முனி இப்போது ஆழ்ந்த த்யானத்தில் பேரானந்த நிலையை அடைந்து
சுகிக்கிறார் . அகம் அன்னம் என்று பாடல்கள் தொடர்கின்றது. அதில் பேரானந்த
நிலையை "ஹா வூ, ஹா வூ " என்று யோகின் இன்பம்  தெரிகிறது.  பின் அந்த ஆனந்த ஜ்யோதியை கண்டேன் என்பதையும்
தெளிவாக கூறுகிறார். அந்த பேரானந்த உபநிஷத் பாடல் கீழ் வருமாறு..


AHAM ANNAM அஹம் அன்னம்

 Etam annamayamaatmaa anupasamkramya
Etam manomayamaatmaa anupasamkramya
Etam vijnaanamayamaatmaa anupasamkramya
Etam aanandamayamaatmaa anupasamkramya
Imamllokaan kamaanni kaamaroopyanusamcharan
Etat saamam gaayanaaste
Haa...vu   haa....vu   haa....vu
Aham annam aham annam aham annam
Aham annado aham annado aham annadah
Aham slokakrut aham slokakrut aham slokakrut
Aham asmi prathamajaa shrutasya poorvam devebhyo amrutasya naabhyai
Yo maa dadaati sa ideva maavah
Aham annam annam adantama admi
Aham vishvam bhuvanam abhyabhavaam Suvarna jyotih

meaning: English
Hāa vu! Hāa vu! Hāa vu! [ecstasy...] I am the food, I am the food, I am the food! I am the eater of the food, I am the eater of the food, I am the eater of the food! I am the maker of verses [poet], I am the maker of verses, I am the maker of verses! I am the first born of this world, the manifestation of truth as the formed and the formless! I existed before the gods! I am the centre of immortality! He who offers food, it is this me he protects! I am food, I am food and I am the one who eats up the eater of food! It is I that has become the entire universe! I am the golden light

 ஹா...வூ , ஹா..வூ (பேரின்பத்தின் வெளிபாடாக இந்த சத்தம்  ..அகமே அன்னம், அகமே அன்னம், அகமே அன்னம். நானே அன்னத்தை உண்பவன்,நானே அன்னத்தை உண்பவன், வாக்கு உரைப்பவன் அகமே,  வாக்கு உரைப்பவன் அகமே, முழு முதலும் அகமே, உருவமும், அருவமும் ஆகி நின்ற மெய்யே, பழம் பொருளே, இரவா வரம் கரு பொருளே. அன்னம் அளிப்பவனே, என்னை காக்கும் காவலனே. அகமே அன்னம், அகமே அன்னம். நானே உண்ணுகின்றேன் அந்த உண்ணும் அகத்தை உண்பவன். அதனாலே  நான் பிரபஞ்சமானேன். அந்த அருட் பெரும்  சொர்ண சோதி நானானேன்.



இதனை அழகாக மாணிக்கவாசகர் அனுபவத்தோடு ஒப்பிடலாம்

மாசற்ற சோதியே மலர்ந்த மலர்ச்சுடரே
  தேசனே தேனார் அமுதே சிவபுரனே


அடியார்க்கு அன்னம் பாலித்தல், அன்னம் பாலை பிரித்து எடுத்தல்
என்ற வாக்கியங்கள் ஞானம் சார்ந்து இருப்பதை உணரலாம்
 நன்றி .தகவல் உதவி ;.18 siddar and meditation and techniques

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.