திங்கள், 28 டிசம்பர், 2015

Tuesday, December 22, 2015

பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்


பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் ,  மருதேரி |  விண்ணப்பம்  


1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள்  இப்புவியெங்கும் நிறையட்டும்

   எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்

   வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்

   வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்


2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்

    சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்

    என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்

    ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய்  நிற்கட்டும்     


3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்

    ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்

    ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்

    உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும் 


4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்

    மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும் 

    பிரம்மன் ஊழ்வினை எழுத்தும்,  உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும் 

    கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும் 


5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும் 

    கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும் 

    கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை  அடியார்கள் வேண்ட சுரக்கட்டும் 

    அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும் 


6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்

    அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும் 

    நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்

    அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்


7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை  நாங்கள் பெறவேண்டும்

   அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை  அனைவரும் பெறவேண்டும்

    வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்

    கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்


8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்

    கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்

    குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்

    இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும் 


9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி

     தந்தையாகி  வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி

     அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி

     விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி


   உயர் திருடிகள் போற்றி போற்றி |   கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.