சனி, 20 டிசம்பர், 2014

Siddha Medicine of Bhrigu Guru Pooja by Agathiar thru Nandi


For the Bhrigu Guru-Pooja on 2nd January-2015 following is the Nandi on Medicine per Agasthiar Vaaku

2nd January - பிருகு குரு பூசைக்காக நந்திதேவர், அகத்தியரின் மருந்து வாக்கு அருளல். அனைவரும் வந்து மருந்தாகிய அமிர்தத்தை உட்கொள்ள அழைகின்றோம்



 


 
ஓங்கவே பிரிகுமுனி ஆசியும் தான் 
ஒரு சேர சித்தர்களின் ஆசியும் உண்டு 
பாங்குடனே கைபாகங்கள் செய் பாகங்கள் 
பக்குவமாய் காட்டுவித்தோம் மருந்தின் அளவை 
 
அளவுபடி என்சகமாம் சகத்திரம் குன்றா 
அழகான கமலமது திண்ணத் தொப்ப 
நாளதனில் கும்பமுனி வாக்கு சொல்ல 
நலமுடைய மரகதமும் மொட்டு விட்டு 
 
விட்டதொரு இதழ்தானே சிதைத்து சுண்ணம்
விதிப்படியே எண்மரக்கால் இரண்டும் நெல்லி 
தாட்டிகமாய் விதைசுத்தி சுண்ணம் ஆக்கி 
தஞ்சமென பலமளவு தூக்களவு 
 
அளவுமுறை பிடிநூறாம் அளவில் வாணி 
அத்துடனே இயற்கையதாம் மதுர பண்டம் 
தெள்ளவே சர்க்கரையும் தாள வெல்லம் 
தகும் அழகாய் ஓர் பகுதி கலவை செய்து 
 
செய்துமே மூன்றுப்படி அளவில் நெய்யும் 
சேர்த்துமே நலம் மதுரமது இத்துடனே 
மெய்யாக குரு மிளகும் சுக்குசுண்ணம் 
மருந்தான அரத்தையுடன் சீரகம் சீர் 
 
சீர்படுத்தி சுகந்தவேர் நீரிநோடும் 
சிவசிவமே குளிகைநலம் மழலையற்கே 
நேர்த்திபட பாகுவகை உயர்வாய் கூட்டி 
நல்விதமாய் ஒர்படிக்கு மேலாய் குளிகை 
 
மேலான ஓர்பகுதி நீரும் நன்று 
மங்கலமாய் குருவிழா பொலிவும் காண 
நிலத்தோர்கள் அதிசயிக்க வண்ணம் அப்பா 
நிர்மலமாய் சமதர்ம நியதி படி

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.